வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் விசேட மேற்பார்வை!

Date:

வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரபிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம், மற்றும் வியாபார நிலையங்கள்,உணவகங்களில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்