நுவரெலியா எம்.பி மருதபாண்டி ராமேஸ்வரனிற்கும் கொரோனா!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் இன்று (19) நடத்தப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையின் போது தொற்று கண்டறியப்பட்டதாக டிக்கோயா அடிப்படை மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்தார்.

கோவிட் 19 அறிகுறிகளுடன் மாருதபாண்டி ராமேஸ்வரன் இன்று டிக்கோயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக மருதபாண்டி ரமேஷ்வரன் , டிக்கோயா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

எம்.பி.யுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு தலவாக்கலை, மடகும்புர பகுதியின் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக டிக்கோயா அடிப்படை மருத்துவமனையின் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி...

சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வரும்...

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்