வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் விசேட மேற்பார்வை!

Date:

வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரபிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம், மற்றும் வியாபார நிலையங்கள்,உணவகங்களில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்