நேற்று (12) நாட்டில் 2,429 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 133,527 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,386 பேர், புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்த 43 பேரும் நேற்று தொற்றிற்குள்ளாகினர்.
25,050 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 1,016 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107,657 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,519பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.




