கல்முனை பிரதேச செயலக வழக்கு அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு!

Date:

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் இடையீட்டு மனுதர்களான (பிரதிவாதிகள்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் அவர்கள் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் ஆஜரானதுடன் வழக்காளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர்.

இதன்போது இருதரப்பு சட்டத்தரணிகள் குழுவும் தமது வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர். இருந்தபோதிலும் மேலதிக வாதங்களையும், சமர்ப்பிப்பு களையும் முன்வைக்க அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்