இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லசந்த ரோட்ரிகோவுக்கு ஓகஸ்ட் 01, 2025 முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, டிசம்பர் 31, 2024 முதல் இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்திற்கு முன்பு, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ இலங்கை இராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றினார்.



