இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பொல்கஹவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பாக இந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக பணியாற்றினார்.




