மின் இணைப்பை துண்டிக்க வந்த மின்சாரசபை ஊழியர்களுக்கு பின்புறத்தை காட்டியவர் கைது!

Date:

மின்சார சபை ஊழியர்கள் ஒரு வீட்டில் மின்சாரம் துண்டிக்க வந்தபோது, ​​அவர்களை தடுத்ததற்காக வெல்லவாய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்களை குறித்த நபர் அரிவாளால் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் தனது கால்சட்டையை கழற்றி, மின்சாரசபை ஊழியர்களிடம் தனது பின்புறத்தைக் காட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மின்சார சபை ஊழியர்கள் அதிகாரிகள் வெல்லவாய பொலிஸாரிடம் செய்த புகாரின் அடிப்படையில், இந்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்