மின் இணைப்பை துண்டிக்க வந்த மின்சாரசபை ஊழியர்களுக்கு பின்புறத்தை காட்டியவர் கைது!

Date:

மின்சார சபை ஊழியர்கள் ஒரு வீட்டில் மின்சாரம் துண்டிக்க வந்தபோது, ​​அவர்களை தடுத்ததற்காக வெல்லவாய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்களை குறித்த நபர் அரிவாளால் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் தனது கால்சட்டையை கழற்றி, மின்சாரசபை ஊழியர்களிடம் தனது பின்புறத்தைக் காட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மின்சார சபை ஊழியர்கள் அதிகாரிகள் வெல்லவாய பொலிஸாரிடம் செய்த புகாரின் அடிப்படையில், இந்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்