உழவு இயந்திர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Date:

நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற பரிதாபகரமான விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (24) இரவு, நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதவடி பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்