மது போதையில் மதகுரு

Date:

மது போதையில் வர்த்தக நிலையம் ஒன்றில் கடும் அட்டகாசம் புரிந்த இந்து மதகுரு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் வவுனியாவில் நடந்தேறியுள்ளது

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் இந்து மதகுரு ஒருவர் அட்டகாசம் செய்ததையடுத்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (30) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மது போதையில் இருந்த இந்து மதகுரு, அப்பகுதியில் இயங்கும் உணவகம் ஒன்றின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு, அருகிலிருந்த தொலைக்காட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவத்தை பார்த்த வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வீதியில் சென்றவர்களும் இணைந்து குறித்த மதகுருவை மடக்கிப் பிடித்து வைத்ததுடன், உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மதகுருவை கைது செய்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைகளுக்குப் பின்னர், அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்