இலங்கையிலிருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
இலங்கை தவிர, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து பயணிகள் நாட்டிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட திரிபடைந்த COVID-19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க இந்த முடிவு எட்டப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் தடை மே 14 வரை நடைமுறையில் இருக்கும்.




