கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.
கனடாவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக தப்புல டி லிவேராவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.
இருப்பினும், அவர் அதனை நிராகரித்ததாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்தபடி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்டமா அதிபரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.
தப்புல டி லிவேரா தனது பதவிக் காலத்தில் இதுவரை 27,206 கிரிமினல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை முடித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் இரண்டு ஆண்டு கால பதவிக்காலப் பகுதியில் (2019 மே முதல் 2021 மே வரை) இது செய்யப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.




