கனடா தூதர் பதவியை நிராகரித்தார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா!

Date:

கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.

கனடாவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக தப்புல டி லிவேராவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.

இருப்பினும், அவர் அதனை நிராகரித்ததாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்தபடி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டமா அதிபரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.

தப்புல டி லிவேரா தனது பதவிக் காலத்தில் இதுவரை 27,206 கிரிமினல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை முடித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் இரண்டு ஆண்டு கால பதவிக்காலப் பகுதியில் (2019 மே முதல் 2021 மே வரை) இது செய்யப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி...

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்