குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது அங்குள்ள அன்னதான மடத்திற்கு;கு கடந்த 8ம் திகதி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று அதனை நிறுத்தி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளின் நீற்றை திறந்து ஒருபவுண் தங்க சங்கிலி ஒரு கிராம் மோதிரம் மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை வைத்து பூட்டிவிட்டு மடத்துக்குள் சென்று திரும்பி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் சீற்றை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணம் மற்றும் பணம் திருடு போயுள்ள கண்டு கொண்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் திருடிய தங்க சங்கிலி புதைத்து வைத்திருந்த பற்றை காட்டிற்கு சென்று தேடுதலில் ஈடுபட்ட போது அங்கு அது கிடைக்கவில்லை எனவும் திருடிய பணத்தை செலவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது குறித்த நபர் ஏற்கனவே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுவர் எனவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.




