தெங்கு அபிவிருத்தி சபையின் புதிய கொள்கை

Date:

நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபையிடமிருந்து கட்டாய அனுமதி பெற வேண்டும் என புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் எடுக்கப்பட்டதாக பணிப்பாளர் சபையின் ஆலோசகர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ஏக்கருக்கு மேல் தென்னை மரங்கள் பயிரிடப்பட்ட நிலங்களை ஏலம் விடுவது அல்லது பிரிப்பது தடைசெய்யப்பட்டதுடன், விவசாய நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த நினைத்தால், தென்னை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் அல்லது தொடர்புடைய அரசாங்க அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வுக்குப் பின்னர் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 10 ஏக்கருக்கு குறைவான காணிகளை ஏலம் விட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய விதிமுறைகளின்படி அந்த அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன, மேலும் எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்ட திருத்தங்களாக முன்வைக்க தெங்கு அபிவிருத்தி சபை தயாராகி வருகின்றது.

இந்த நடவடிக்கைகள் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலப்பயிர் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது தேங்காய் தட்டுப்பாட்டை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்