பாரிய அரிசி ஆலைகள் அத்தியாவசிய கடமையாகக் கருதி தமது அரிசி இருப்புக்களை விடுவிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத் தீர்வாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளுடன் இணைந்து, அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், அடுத்த பருவத்தில் இருந்து நாட்டில் அரிசி பிரச்சினையை நிர்வகிப்பதற்கான நிலையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிடும் என்றார்.




