சுமந்திரன் தமிழர்களுக்கு தேவை; அவர் வடக்கு முதலமைச்சராக வேண்டும்: சி.சிறிதரன்!

Date:

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் பொறுமையாக இருந்து, வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

இன்று (17) வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தின் போது, சிறிதரன் இதனை தெரிவித்தார்.

“சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரது சேவை தமிழ் மக்களுக்கும், கட்சிக்கும் தேவை. சம்பந்தன் ஐயா சொன்னதை போல, எல்லாம் மடியில் வந்து தானாக விழும். விரைவில்- அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடமாகாணசபை தேர்தல் வரும். அதற்கு எமக்கு பொருத்தமான முதலமைச்சரும் தேவை. சுமந்திரன் பொறுமையாக இருந்தால், எல்லாம் தானாக அமையும்“ என்றார்.

சி.சிறிதரன் இதனை தெரிவித்த போது, எம்.ஏ.சுமந்திரன் மௌனமாக அவதானித்துக் கொண்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்