சுமந்திரன் தமிழர்களுக்கு தேவை; அவர் வடக்கு முதலமைச்சராக வேண்டும்: சி.சிறிதரன்!

Date:

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் பொறுமையாக இருந்து, வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

இன்று (17) வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தின் போது, சிறிதரன் இதனை தெரிவித்தார்.

“சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரது சேவை தமிழ் மக்களுக்கும், கட்சிக்கும் தேவை. சம்பந்தன் ஐயா சொன்னதை போல, எல்லாம் மடியில் வந்து தானாக விழும். விரைவில்- அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடமாகாணசபை தேர்தல் வரும். அதற்கு எமக்கு பொருத்தமான முதலமைச்சரும் தேவை. சுமந்திரன் பொறுமையாக இருந்தால், எல்லாம் தானாக அமையும்“ என்றார்.

சி.சிறிதரன் இதனை தெரிவித்த போது, எம்.ஏ.சுமந்திரன் மௌனமாக அவதானித்துக் கொண்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்