தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு உயிரச்சுறுத்தல் அபாயமுள்ளதால், அவர் தனது பாதுகாப்பில் அக்கறையெடுக்க வேண்டுமென குறிப்பிட்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதால் ரணில் விக்கிரமசிங்க தரப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக செய்திகள் வெளிவரும் பின்னணியில் இந்த தகவலும் வெளியானது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஸ்வரனின் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது-
//தமிழ் பொது வேட்பாளர் திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இம்முறை தேர்தலில் திரு.அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிங்களக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு இத்துடன் அனுப்பப்படுகிறது. சிங்களக் கடிதத்தின் பிரதியும் இத்துடன் அனுப்பப்படுகிறது.//






