அநுராதபுரம் – கண்டி வீதியில் கவரகுளம் சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (17ம் திகதி) காலை 7.30 மணியளவில் இந்த துரதிஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




