63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

Date:

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை, தம்முடன் உடலுறவு கொள்ள வருமாறு கேட்டு கடிதம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவட்டுன சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புகார்தாரர் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அறையில் தங்கியிருந்த சந்தேக நபர்கள், தெஹிவளை மற்றும் பனதுறையைச் சேர்ந்த மூன்று நபர்கள் ஆவர்.

63 வயதான அந்த அவுஸ்திரேலியப் பெண், 25 ஆம் திகதி இலங்கைக்கு வந்து உனவட்டுன சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தார். அருகிலுள்ள அறையில் தங்கியிருந்த சந்தேக நபர்கள், தங்களுடன் உடலுறவு கொள்ளுமாறு கேட்டு, தான் தங்கியிருந்த அறையின் கதவின் கீழ் வழியாக பல காகிதத் துண்டுகளை எழுதி வைத்ததாக அவர் பொலிஸாரிடம் புகார் அளித்திருந்தார். பின்னர், உனவட்டுன சுற்றுலா பொலிஸாரினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஹபரடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்