ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் பிரிந்தனர்!

Date:

ஜி.வி.பிரகாஷ் குமார் – சைந்தவி இருவரும் தங்களின் பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது காதலியான பாடகி சைந்தவியைக் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

11 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், “ஆழ்ந்து யோசித்த பின்னர், நானும் சைந்தவியும் எங்களின் 11 ஆண்டுக்கால திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம். இருவரின் மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரஸ்பர மரியாதையை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் எங்களின் இந்தத் தனிப்பட்ட முடிவை மதித்து, புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இருவரும் பிரிவதைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவே சிறந்தது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்களின் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு அவசியமானது” என்று பதிவிட்டுள்ளார்.

சைந்தவியும் இதைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்