ஈரான் சுமார் 185 ட்ரோன்கள், 110 தரையிலிருந்து மேற்பரப்பு ஏவுகணைகள் மற்றும் 36 குரூஸ் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது என்று இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தி நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
பெரும்பாலானவை ஈரானில் இருந்து ஏவப்பட்டாலும், சில ஈராக் மற்றும் யேமனில் இருந்தும் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியா, ஏமன் மற்றும் ஈராக்கில் இருந்து ஏவுகணைகள் வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறுகிறார்.
இதேவேளை, இன்று இஸ்ரேல் மீதான ஈரான் நடத்திய தாக்குதல், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை ஒத்திருக்கிறது என்று போர் ஆய்வுக்கான நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
“ரஷ்ய தாக்குதல்கள் மேற்கத்திய வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை ஊடுருவிச் செல்வதற்கான உகந்த தொகுப்பைத் தீர்மானிக்க முயற்சித்தன” என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. “ரஷ்யா உக்ரைனில் ஈரானிய ட்ரோன்களுடன் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் கலவையை பரிசோதித்துள்ளது.”
ஈரான் ஹவுதி ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்க கடற்படையின் வான் பாதுகாப்பையும் சோதித்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




