டில்லி உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உறவினர்கள் நடத்திய வன்முறையில் வைத்தியசாலை பலத்த சேதமடைந்துள்ளது. வைத்தியர்கள் தாக்கப்பட்டனர்.
தாக்குதலின் பின்னர் தற்போது, வைத்தியசாலை வழமைக்கு திரும்பியுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதார கட்டமைப்பு நிலைமையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறது.




