குருணாகலின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

குருணாகல்‌ மாவட்டத்தின்‌ கனேவத்த பிரதேச செயலகப்‌ பிரிவிலுள்ள‌ கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல கிராம அலுவலர்‌ பிரிவு (GN 442) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்‌ 19 பரவலை தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையத்தின்‌ பிரதானி, இராணுவத்‌ தளபதி ஜெனரல்‌ ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்‌.

குறித்த பகுதியில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் அடுத்த மூன்று வாரங்கள் தீர்க்கமானதாக இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் பொதுமக்கள் நடந்து கொண்ட விதம் காரணமாக, இலங்கையில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த ஏராளமான நபர்கள் சமீபத்திய நாட்களில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் கண்டறியப்பட்டதால், இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்