2 மாதங்களின் பின்னர் எகிறிய தொற்றாளர் எண்ணிக்கை: நேற்று 578 பேருக்கு தொற்று!

Date:

இரண்டு மாதங்களின் பின்னர் இலங்கையில் நேற்று (21) கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்தது. நேற்று 578 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 98,050 ஆக உயர்ந்தது.

நாட்டில் கடைசியாக பெப்ரவரி 22ஆம் திகதி அன்று 518 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 516 பேர், மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அண“மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 62 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி 3,752 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 121 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 93,688 ஆக உயர்ந்தது. 483 பேர் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்