யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

Date:

யழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்டபோதும் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை. இதையடுத்து பொலிசாரிடம் முறையிடப்பட்டது.

ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கைதான ஆசிரியர் ஏற்கெனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்லை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆங் சான் சூ கீ வீட்டுக்காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

மியான்மரின் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி மைத்திரிக்கு முன்னரே தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே...

முக்கிய பல ஊழல் வழக்குகள் இந்த வருடம் விசாரிக்கப்படும்!

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்