யாழ் கலாசார மண்டப கையளிப்பு நிகழ்வு இன்று: தமிழர் தரப்பு புறக்கணிக்குமா?

Date:

யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் யாழ் நகரின் மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.

இந்த மையம் இந்திய அரசின் உதவியுடன் ரூ.1,800 மில்லியன் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ் கலாசார நிலையம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

யாழ் கலாசார மையமானது முழு வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம், அருங்காட்சியக இடங்கள், ஒற்றை மாடி கற்றல் கோபுரம் மற்றும் ஒரு அரங்கம், பல ஊடக நூலகம், விரிவுரை அறைகள், ஸ்டூடியோக்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

எனினும், முன்னர் திட்டமிட்டபடி யாழ் மாநகரசபையிடம் இன்று கட்டிடம் கையளிக்கப்படாது. மாநகரசபையின் காணிக்குள் கட்டப்பட்டு, இதுவரை மாநகரசபையும் பராமரிப்பில் பங்கேற்கும் கட்டிடத்தை ஒப்பந்தப்படி தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென மாநகரசபை கோருகிறது. அத்துடன், முதல்வர் தரப்பிற்கு உரியமுறையில் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் யாழ் மாநகரசபை முதல்வர் தரப்பு கடும் அதிருப்தியடைந்துள்ளது. நிகழ்வை புறக்கணிப்பது பற்றி இன்று காலை மாநகரசபை தீர்மானிக்கும்.

இன்று காலை பண்ணை சுற்றுவட்ட பகுதியில் மரநடுகை நிகழ்வு நடக்கும். இதில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இதன்போது, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முதல்வர் இ.ஆனோல்ட் தீர்மானித்துள்ளார். இதன்போது சாதகமான பதில் கிடைக்காவிட்டால் நிகழ்வை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்