25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

தினேஷ் ஷாஃப்டர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்: வெளியான புதிய தகவல்!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் சயனைட் உட்கொண்டதன் விளைவாகும் என புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று (08) அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கழுத்தை நெரித்ததில் ஷாஃப்டருக்கு ஏற்பட்ட காயங்கள் ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான உண்மைகளை முன்வைத்த போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாஃப்டரின் கைத்தொலைபேசி மற்றும் ஐபாட் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் வெளிப்பட்ட மற்ற தகவல்களையும் விசாரணைக் குழு நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஷாஃப்டர் தனது மனைவி மற்றும் அவரது மனைவியின் பெற்றோருக்காக தயாரித்த பல ஆவணங்கள் மொபைல் போன் மற்றும் ஐபாடில் சேமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது ஐபாடில் ‘Apple Note’ இல் சேமிக்கப்பட்ட தரவுகளில் “லிஸ்ட்” எனப்படும் ஒரு ஆவணம் இருந்தது, மேலும் பல பொருட்களின் பட்டியலில் “KCM” மற்றும் “ZIP TIE” போன்ற சொற்கள் அந்த ஆவணத்தில் இருந்தன. “கேசிஎம்” என்பது சயனைட்டைக் குறிக்கும் சுருக்கமான பெயர் என்றும், “ஜிப் டை” என்பது எதையாவது அல்லது யாரையாவது கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அவரது ஐபாடில் “THE LIST” எனப்படும் மற்றொரு பெயர் பட்டியல் காணப்பட்டதாகவும், அதில் திருமதி முத்துக்குமாரண, ஜகத் செனவிரத்ன, ஜயரத்ன, அன்டன் ஹேமந்த மற்றும் எலியன் குணவர்தன ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஐந்து பெயர்களில் கடைசி நான்கு பெயர்களில் ‘அழிக்கும் நோக்கம் கொண்ட வாக்கியம்’ உள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஐபாடில் பிரையன் தாமஸின் புகைப்படங்கள் அடங்கிய பிடிஎப் கோப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஜோசபின் தாமஸ் மற்றும் கிறிஸ்டியன் தாமஸ் ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பி.டி.எஃப்-ல் ‘‘MOST IMPORTANT WHO IS BEHIND B.T. GET MY MONEY BACK”என்று ஒரு வாக்கியமும் இருந்ததை அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.

விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் செய்திகளை சமர்ப்பித்தனர், இது தினேஷ் ஷாஃப்டர் மற்றும் பிரையன் தாமஸ் இடையே டிசம்பர் 25, 2019 முதல் டிசம்பர் 15, 2022 வரை, ஷாஃப்டரின் மறைவு வரை அனுப்பப்பட்டது. பிரையன் தாமஸுக்கு ஷாஃப்ட்டர் அனுப்பிய சில செய்திகள் நீக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

52 வயதான தினேஷ் ஷாஃப்டர் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தனது காரின் சாரதி ஆசனத்தில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தது.

தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பாக மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் ஆகியோரும் விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் அளித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment