இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஹரக் கட்டா டுபாயில் விடுதலை!

Date:

டுபாய் பொலிஸாரின் பிடியில் இருந்த பிரபல போதைப்பொருள் மன்னன் நடுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா திங்கட்கிழமை (3) விடுவிக்கப்பட்டதாக துபாயிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தொடர்பான குற்றப் பதிவுகளை இலங்கை அதிகாரிகள் உரிய நேரத்தில் டுபாய் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தவறியதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கோப்புகள் திங்கட்கிழமை (3) வரை கூட பாதுகாப்பு அமைச்சிடம் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தலைமையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பில் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மூலம் தேவையான நடவடிக்கைக்காக இந்த கோப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதன்படி, சந்தேகநபருக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளுக்காக டுபாய் அதிகாரிகளுக்கு உரிய கோப்புகளை அனுப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார். இந்தக் கோப்பு இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக டுபாய் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி டுபாயில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல முயன்றபோது அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு பிடியாணையின் பேரில் டுபாய் பொலிசாரால் ஹரக் கட்டா கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது, ​​சந்தேக நபர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

ஹரக் கட்டா நாட்டில் பாரிய அளவிலான ஹெரோயின் கடத்தல் மற்றும் அவரது வழிகாட்டுதலின் பேரில் பல கொலைகள் செய்ததற்காக தேடப்படும் சந்தேக நபர் ஆவார். கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் ஹரக் கட்டாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவிலான ஹெரோயின் பல சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்