பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி முழங்காவில், கிருபாகரன் வீதிப் பகுதியில் பாலை மரங்களை வெட்டிக் கொண்டிருந்த இருவரை, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பல உத்தியோகத்தர்கள் கைது செய்திருந்ததுடன், மரக்குற்றிகளையும் மீட்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1