பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 35°C-க்கு மேல் பதிவானது. மொனராகலைல் 37.5°C-ம், திருகோணமலை மற்றும் பொத்துவிலில் தலா 37.1°C-ம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவில் 37.0°C-ம், வவுனியாவில் 36.6°C-ம் பதிவாகியுள்ளது. மத்தளவில் 35.5°C-ம், அனுராதபுரத்தில் 35.1°C-ம் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பதிவான மற்ற குறிப்பிடத்தக்க அதிகபட்ச வெப்பநிலைகள்:
பதுளை: 33.8°C
யாழ்ப்பாணம்: 33.6°C
குருணாகல்: 33.4°C
இரத்தினபுரி: 33.3°C
இரத்மலான: 32.7°C
புத்தளம்: 32.3°C
கட்டுநாயக்க: 31.8°C
கொழும்பு: 31.6°C
மன்னார்: 31.3°C
ஹம்பாந்தோட்டை: 31.0°C
கட்டுகஸ்தோட்ட: 30.6°C
பண்டாரவளை: 29.0°C
காலி: 29.7°C
நுவரெலியா: 20.6°C




