நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

Date:

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருவதாக இன்று தெரிவித்தார்.

“நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்,” என்று அவர் சபையில் கூறினார்.

“என்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு நீதித்துறையிடம் கோரி ஓசல ஹெரத் தாக்கல் செய்துள்ள வழக்கானது, சிங்கள மக்கள் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்,” என்றும் அவர் கூறினார்.

இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகிய பின்னர், மக்கள் பிரதிநிதியாக பொறுப்புணர்வுடன் செயற்படாமல், தன் மீதான கவனக்குவிப்பில் மட்டுமே அக்கறையாக இருந்தார் என்ற விமர்சனங்களின் மத்தியில், இப்படி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்