முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்திருந்த ரிட் மனு, நாளை (ஜூன் 18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இம்மனு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆதாரங்களுடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முறையாக அமைக்கப்படாத காரணத்தால் வழக்கு விசாரணை நடைபெறாமல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் தன்னை கைது செய்வதைத் தடுக்க நீதிமன்ற உத்தரவு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ச இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளன.




