5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

Date:

ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார்.

டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம் ஆண்​டில் ஷிகா​வுக்​கும் சாப்ட்​வேர் இன்​ஜினீயர் சவுரபுக்​கும் திரு​மணம் நடை​பெற்​றது. சில மாதங்​களி​லேயே இரு​வருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்​தன.

கணவர் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷிகா, தனது தாய் வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். கணவர் சவுரபிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 5 ஆண்​டு​களாக நீதிமன்றத்தில் நடை​பெற்று வந்​தது.

இதனிடையே சில வாரங்​களுக்கு முன்பு ஷிகா​வின் தந்​தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. நிதிச்​சுமை காரண​மாக அவர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்த தகவல் சவுரபுக்கு தெரிய​வந்​தது. உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்ற அவர், குரு​கி​ராமில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மாம​னாரை சேர்த்​தார்.

மருத்​துவ சிகிச்​சைக்​கான முழுச்​செல​வையும் அவரே ஏற்​றுக் கொண்​டார். இதன்​காரண​மாக இரு குடும்​பங்​களுக்கு இடையே இருந்த கசப்​புணர்வு மறைந்​தது. ஷிகா​வின் மனநிலை​யிலும் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டது.

சில நாட்​களுக்கு முன்பு டெல்​லி​யில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் விவாகரத்து வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. இதில் ஆஜராக சவுரபும் ஷிகா​வும் நீதி​மன்​றத்​துக்கு சென்​றனர்.

அப்​போது நீதி​மன்ற வளாகத்​தில் கணவரை பார்த்த ஷிகா, ஓடோடிச் சென்று கட்​டியணைத்து கதறி அழு​தார். தனது கையில் வைத்​திருந்த விவாகரத்து வழக்கு ஆவணங்​களை கிழித்​தெறிந்து வீசி​னார்.

இதன்​பின்​னர் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெறு​வ​தாக இரு​வரும் நீதிப​தி​யிடம் முறை​யிட்​டனர். இதை நீதிபதி மகிழ்ச்​சி​யுடன் ஏற்றுக் கொண்​டார். நீதி​மன்ற வளாகத்​தில் சவுரபும் ஷிகா​வும்​ உணர்​ச்​சிப்​பெருக்​கில்​ கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில்​ வைரலாக பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவுக்காக பிரச்சாரம் செய்தவர்களுக்கு சிக்கல்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற...

பல கொலை வழக்குகளில் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை,...

காலாவதியான நாய்க்கடி தடுப்பூசி சர்ச்சை தீவிரம்; சுகாதார செயலாளர் இன்னும் மௌனம்!

காலாவதியான நாய்க்கடி (Rabies) தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சுற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்