2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக, தகுந்த காரணம் இன்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) வருண ஜெயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் மற்றும் பல அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது மனுவில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்குத் தகுந்த நிவாரணம் வழங்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.




