மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் மீதான வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அரசிற்குச் சொந்தமான சில்லறை விற்பனை வலையமைப்பான லங்கா சதொச மூலம் விற்கப்படும் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக் குறைப்பை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் குறைக்கப்பட்ட விலைகள் புதன்கிழமை (10) முதல் அமலுக்கு வரும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு, கொழும்பின் புறக்கோட்டை சந்தையில் நிலவும் மொத்த விற்பனை விலைகளை விட திருத்தப்பட்ட விலைகள் குறைவாக இருக்கும்.
விலைக் குறைப்பின் கீழ் வரும் பொருட்களில் பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, உள்ளூர் முந்திரி, பால் பவுடர், சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாடு அரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாடு அரிசி மற்றும் பொன்னி சம்பா அரிசி உள்ளிட்ட பிற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கும்.




