குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Date:

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு விவசாயிகளை நேற்று திங்கட்கிழமை (25) சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு ஓப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் குடும்பிமலை வயல் பகுதியை சிஜடி யினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன் போது அந்த பகுதியில் ஒளித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவரான 45 வயதுடையவர் மற்றும் விவசாயி ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்

இவ்வாறு கைது செய்த இருவரையும் சி.ஜ.டி யினர் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...

ரூ.10,000 பேரம் பேசி சிறுவர்களுடன் எக்குத்தப்பு: வர்த்தகருக்கு விளக்கமறியல்!

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட பத்தாயிரம் ரூபா வழங்குவதாக தெரிவித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்