நடனத்தை  தாங்காத கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம்: கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்

Date:

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட மாணவிகள் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த கட்டிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மேல் மாடி கட்டிடமாக நிர்மானிக்க திட்டமிட்டு கீழ் பகுதி மட்டும் நிர்மானிக்கப்பட்ட இந்த கட்டிடம் உறுதியானது அல்ல என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

இந்த நிலையில் சம்பவ தினம் புதன்கிழமை இறுதியாண்டு மாணவிகள் நடன பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாடிக் கட்டிடத்தின் மேல் தரையின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளதையடுத்து 3 மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிட நிர்மானிக்கப்பட்ட தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதன் எந்திரி கடமையை இராஜனாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்