தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (5) இந்த சம்பவம் நடந்தது.
தீவிர விஜய் ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர், தமிழக தேர்தலில் விஜய் வெற்றியீட்டியுள்ளார், அதனால் மது அருந்தி கொண்டாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடத்திய போது, தனது தந்தையின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தற்கொலை மரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.



