புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நாளை (6) வழங்கப்படவுள்ளது.
மாணவி வித்தியாவை கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.
மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற ஆயத்தின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



