மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

Date:

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட
அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும்
சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்த பூநகரி பொலீஸார் நடவடிக்கை
எடுத்து வருகின்றனர்.

ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்றவகையில் மணலுடன் பயணித்த உழவு
இயந்திரத்தினை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி சாரதியினையும் கைது
செய்து தம்மிடம் ஒப்படைத்ததாக பூநகரி பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது- பூநகரி நெற்புலவு முன்பள்ளி வீதி புனரமைப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு
குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.
அவர்களுக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ஜெயபுரத்தில் அமைந்துள்ள மணல்
யாட்டிலிருந்து சனிக் கிழமை அன்று ஒப்பந்தகாரருக்கு வழங்குவதற்கு கொண்டு
சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுமதி சிட்டை வழங்கப்பட்ட உழவு
இயந்திரம் கழிவகற்றும் பணிக்குச் சென்றமையால் சாரதி சபையின் மற்றொரு உழவு
இயந்திரத்தினை கொண்டு சென்று வீதி வேலையில் ஈடுப்பட்டுள்ள
ஒப்பந்தகாரருக்கு மணலை ஏற்றி வந்த போது விசேட அதிரடிப்படையினர் கைது
செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்