பிள்ளையானின் சித்திரவதை முகாமில் செயற்பட்ட 2 பேர் கைது!

Date:

முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன் குழுவினரால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாமில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கடத்துதல், காணாமல் போகச் செய்தல், தாக்குதல் மற்றும் கொலை செய்தல் மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருத்தல் தொடர்பான விசாரணைகளின் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிரான் பகுதியைச் சேர்ந்த, 54 மற்றும் 52 வயதுடைய சந்தேக நபர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மேலதிக விசாரணைக்காக அவர்களை 72 மணி நேரம் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்