பிள்ளையானின் சித்திரவதை முகாமில் செயற்பட்ட 2 பேர் கைது!

Date:

முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன் குழுவினரால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாமில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கடத்துதல், காணாமல் போகச் செய்தல், தாக்குதல் மற்றும் கொலை செய்தல் மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருத்தல் தொடர்பான விசாரணைகளின் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிரான் பகுதியைச் சேர்ந்த, 54 மற்றும் 52 வயதுடைய சந்தேக நபர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மேலதிக விசாரணைக்காக அவர்களை 72 மணி நேரம் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்