வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

Date:

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் இன்று (15) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் நேற்று (14) பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகினர். இதில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அவர்களில் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 34 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் தமது தந்தையுடன் இணைந்து நீராடச் சென்ற போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்