ஆலையடி வேம்பு எரிபொருள் நிலையத்தில் டீசல் மீட்ட விவகாரம்: போலி வழக்கு என நிரூபணம்!

Date:

ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொள் கலன்களில் 800 லீற்றர் டீசல் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்த சம்பவம் போலியாக வழக்கு தொடர்ந்துள்ளது நிரூபிக்க பட்டதை அடுத்து அவர் குற்றமற்றவர் என அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் அவரை விடுதலை செய்து மீட்கப்பட்ட டீசலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை (27) பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தது உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்கம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள் கலன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்து 800 லீற்றர் டீசலுடன் அங்கு கடமையாற்றும் ஒருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி ஆஜராகி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த டீசலுக்கு முறையான ஆவணங்கள் பெற்றுள்ளதாகவும் உண்மை விடையங்களை எடுத்துக் கூறினார்.

இதனையடுத்து ஆவணங்களை ஆராய்ந்த நீதவான் பொலிசார் போலியாக வழக்கு தாக்குதல் செய்துள்ளமை கண்டறிந்து கொண்டு கைது செய்யப்பட்டவர் குற்றமற்றவர் என விடுதலை செய்ததுடன் அங்கு மீட்கப்பட்ட டீசலை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தது உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சம்பவம் தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஆலையடிவேம்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவிக்கையில்,

ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அக்கரைப்பற்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் தங்கள் தேவைக்காக டீசல் தேவையென முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும்.

குறித்த அரச கட்டளைக்கு அமைய 04 பெரல் டீசல் வழங்கப்பட்டு திணைக்களத்தினர் கொண்டு செல்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.

இதன் போது இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வருகை தந்த பொலிஸாரிடம் அதற்கான அரச கட்டளையை காட்டியும் பொலிசார் அதனை ஏற்காது அதனை மீறி அங்கிருந்த 04 டீசல் கொள்கலன்களை கைப்பற்றியதுடன்; கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு தாககுதல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைகு;கு எடுக்கப்பட்போது போதிய ஆதாரங்கள் உள்ளதால் சுமத்தப்பட்ட குற்றசாட்டு போலியானது என நிரூபிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட டீசலை நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த காலங்களிலும் தற்போதும் எரிபொருள் தமட்டுப்பாடு ஏற்பட்டபோது பிரதேச மக்களுக்கு முடிந்தவரை எரிபொருள் நெருக்கடி ஏற்படாதவாறு சீரான முறையில் துரிதகதியில் இரவு பகல் பாராது ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் எரிபொருளை விநியோகித்து வந்தனர்.

இதனை பொறுக்க முடியாதவர்களால் பிரதேசத்தை மற்றும் ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவமானப்படுத்தும் திட்டமே செயலாக இதனை கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...

தவெக ஆட்சி அமைய இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் ஆதரவு ஏன்? – பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் விவரிப்பு

“தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்