இரணைமடுவின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

Date:

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(28 ) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளன. குளத்தின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக அனைத்து வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளான முல்லைத்தீவு, வவுனியா வடக்கு பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக குளத்துக்கான நீர் வரவு அதிகமாக காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி குளத்திற்க வருகின்ற நீரின் அளவு மணித்தியாலயத்திற்கு 6.503 எம்சிஎம் அளவாக காணப்படுகிறது.

இதேவேளை மணித்தியாயலத்திற்கு 0.73 எம்சிஎம் நீர் வெளியேறுகிறது. இன்று(28) மாலை நான்கு மணிக்கு இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 34 அடியாக காணப்பட்டது. குளத்தின் முழுமையான நீர் மட்டம் உயரம் 36 அடியாகும்

இதேவேளை கிளிநொச்சி கிழக்கு பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குட்பட்ட கனககாம்பிகைகுளம், கல்மடுகுளம், பிரமந்தனாறு குளம் என்பனவும் வான் பாய்கின்றன்.

எனவே குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் குளத்தின் கீழ் பகுதிகளிலும், வான் பாயும் நீர் வெளியேறுகின்ற தாழ் நிலப்பகுதிகளை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்கின்ற பொது மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்