மலையக பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு நிகழலாம்

Date:

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

இது வாழ்நாளில் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அசாதாரணமான நிலைமை என்று கூறினார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகப் பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி நிலவினால் அந்த இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் கடந்த 24 மணித்தியாலங்களில் 500 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி மலையகப் பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மலையகப் பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண் மேடுகள் உள்ள இடங்களில் இருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலைமையின்படி, அதிகாரிகளால் செய்யக்கூடியவை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்தப் பகுதிகளுக்குச் செல்வது கூட அவர்களுக்குக் கடினமாக இருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்