கர்நாடகாவில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் இன்ஜின் ஓயில் குடித்து உயிர் வாழும் ‘ஓயில் குமார்’

Date:

கர்​நாட​கா​வில் ஓயில் குமார் என்​பவர் தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வரு​வது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்தி உள்​ளது. உடலுக்கு தீங்​கான ஓயிலை குடித்து வரும் இவர் இது​வரை மருத்​து​வ​மனைக்கே சென்​ற​தில்லை என கூறு​வது வியப்​பின் உச்​சிக்கு அழைத்து செல்​கிறது.

அண்​மை​யில் சமூக வலை​தளங்​களில் ஓயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்​தர் ஒரு​வர் வாக​னங்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் இன்​ஜின் ஓயிலை குடித்​துக்​கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட‌ லட்​சக்​கணக்​கான பார்​வை​யாளர்​கள் ஆச்​சரி​யத்​தோடு பகிர்ந்து வரு​கின்​றனர்.

அந்த‌ வீடியோ​வில் இடம்​பெற்​றுள்ள 45 வயது மதிக்​கத்​தக்க நபரின் பெயர் குமார். கர்​நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்​தவர். கடந்த 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஓயிலை குடிப்​ப​தால் மக்​களால் ‘ஓயில் குமார்’ என அழைக்​கப்​படு​கிறார். காலை, மதிய உணவை உண்​ணா​மல் மூன்று வேளை​யும் ஓயிலே குடித்து வரு​கிறார். ஆனாலும் இது​வரை உடல்​நிலை பாதிக்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டதே இல்​லை.

வருடந்​தோறும் சபரி மலை ஐயப்​பன் கோயிலுக்கு பாத யாத்​திரை​யாக செல்​வ​தால் தனக்கு எந்த தீங்​கும் நேர​வில்லை என ஊடகங்​களுக்கு அவர் பேட்​டியளித்​துள்​ளார்.

மருத்துவர்கள் எச்சரிக்கை: இதுகுறித்து மருத்​துவ நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘பயன்​படுத்​தப்​பட்ட இன்​ஜின் ஓயில் உடலுக்கு தீங்கு விளைவிக்​கக்​கூடியது. அதி​லுள்ள பாலிசைக்​ளிக் ஹைட்ரோ கார்​பன் புற்​று​நோயை உரு​வாக்​கும். ஓயி​லில் கலக்​கப்​பட்​டுள்ள‌ இரும்​பு, அலுமினி​யம், தாமிரம், ஈயம் போன்ற தனிமங்​கள் நுரை​யீரல், கல்​லீரல், சிறுநீரகம், நரம்பு மண்​டலம் ஆகியற்றை கடுமை​யாக பாதிக்​கும். இதை குடித்​தாலோ, தொடர்ந்து சுவாசித்​தாலோ சுவாச மண்டல பாதிப்​பும் வயிற்று போக்​கும் ஏற்​படும்’’ என தெரிவிக்​கின்​றனர். ஆனால் ஓயில் குமார் எந்த பா​திப்​பும் இல்​லாமல்​ இன்​ஜின்​ ஓயில்​ குடித்​த​வாறே ​பாத ​யாத்​திரை மேற்​கொள்​வது வியப்​பை ஏற்​படுத்​துகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்