மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Date:

அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை( 16 ) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மின்சாரம் தாக்கிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர்இ உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பூசணிக்காய் பயிரிடப்பட்ட நிலத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த நபரை கைது செய்துள்ளதுடன் இச்சம்பவத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர் கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என்பவராவார்.

மேலம் இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை பிரதேச உகன பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் தலைமையில் உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்