தென்னக்கோனை படுகொலை செய்ய திட்டம்

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில், இன்று (20) தெரிவித்தார்.

ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்டாய விடுப்பில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை படுகொலை செய்ய, ஐரோப்பாவில் மறைந்திருக்கும் குற்றவியல் கும்பல் தலைவர் கஞ்சிபானை இம்ரானுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூசா சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஐ.டி.எச். சுத்தா என்ற சமன் குமாரவுக்கு ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு தவறான தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இது ஒரு பொய்யான கூற்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்