வாழைச்சேனை வைத்தியசாலை தீ விபத்தால் எக்ஸ்ரே சேவை பாதிப்பு!

Date:

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் கதிர் இயக்கவியல் பிரிவில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் கதிர் இயக்கவியல் பொருட்கள் சில தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

காலைவேளை குறித்த பிரிவில் இருந்து புகை வருவதை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வைத்திய அத்தியட்சகருக்கு தகவல் வழங்கியமையடுத்து, அவர் மட்டக்களப்பு தீயணைப்பு பிரிவினர், மின்சாரசபை மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மின் ஒழுக்கினால் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இலத்திரனியல் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நோயளர்களின் எக்ஸ் ரே படங்கள் எடுக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நிவர்த்தி செய்ய தற்காலிகமாக ஏறாவூர் மற்றும் காத்தான்குடி வைத்தியசாலைகளில் படங்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் எவ்.பி.மதன் தெரிவித்தார்.

-ருத்திரன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

டுபாயில் கைதுசெய்து அழைத்துவரப்பட்ட இந்தப் பெண் யார் தெரியுமா?

டுபாயில் இருந்து இரண்டு பாதாள உலக குற்றவாளிகளுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கிய நால்வர் கைது!

பேராதனை பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் பேராதனை பல்கலைக்கழக...

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்