ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Date:

ஐ.எம்.எல் டி20 கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) போட்டியில், இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 15 பேர் கொண்ட குழாம் குமார் சங்கக்காரின் தலைமையில் பங்கேற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இம்மாதம் 22ம் திகதி தொடங்கும் இந்த போட்டிகள், மார்ச் 16ம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளன.

இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஷேன் வொட்சன், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கன், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக பிரையன் லாரா, தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜாக் காலிஸூம் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக், தடைப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் மீண்டும் பங்கேற்பதற்கான மிக முக்கியமான தொடர் என கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்